
டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட பாப்பா திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தந்தை இராதாகிருஷ்ண பிள்ளை ஒரு வயலின் கலைஞர்.
இவர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்: மாப்பிள்ளை, ஆத்மசாந்தி, அன்பு, அம்மையப்பன், குடும்பவிளக்கு, ரம்பையின் காதல், ராஜா ராணி, ஆசை, ரங்கோன் ராதா, மல்லிகா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, குறவஞ்சி, விஜயபுரி வீரன், நல்லவன் வாழ்வான், குமார ராஜா, எதையும் தாங்கும் இதயம், சீமான் பெற்ற செல்வங்கள், அருணகிரிநாதர், இரவும் பகலும், காதல் படுத்தும் பாடு, பந்தயம், டீச்சரம்மா, அவரே என் தெய்வம், ஏன், அருட்பெருஞ்ஜோதி, மறுபிறவி, அவசர கல்யாணம், வைரம், வாயில்லாப்பூச்சி
