
தமிழ் சினிமாவில் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். அதன்பிறகு ஆண்டுகளில் 6 தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் நடிக்காமல் இருந்து வந்தார். இதனிடையே இயக்குநர் எஸ்.பி.ஜனாதனன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தில், நாயகியாக நடிக்க ஸ்ருதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், விஜய்சேதுபதியுடன் நான் நடிக்கும் படம் இரண்டு வாரத்தில் தொடங்கும் என்றார்.
