
இதுப்பார் என்று அஞ்சும் அளவுக்கு ன்று சினிமாவை மிகவும் பயம்முருத்தும் விஷயம் என்றால் அது நடிகைகளின் பேட்டி என்று தான் சொல்லணும் காரணம் எந்த நடிகை யார் மானத்தை எப்ப எடுப்பார்கள் என்று ஆகிவிட்டது அதோடு பாலியல் பலத்த்காரதுக்கு நான் பலி ஆனேன் நீ ஆனேன் என்று போட்டி போட்டு நடிகைகளின் பேட்டி வருகிறது இப்போது மேலும் இப்ப ஒரு நடிகை தன் பங்குக்கு சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்
ஹைதராபாத்: பகலில் அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் சந்தியா நாயுடு தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஸ்ரீ ரெட்டியை சக நடிகைகளே மோசமாக பேசினார்கள்.
அபூர்வா ஆதரவு அளித்த பிறகு பிற நடிகைகளும் ஸ்ரீ ரெட்டியை ஆதரிக்கிறார்கள். மேலும் தாமாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக டிவி சேனல்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கியுள்ளனர்.

அம்மா, ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சந்தியா நாயுடு கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார். படுக்கைக்கு சென்றால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் சந்தியா.
பகலில் என்னை அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு வருமாறு கூறுகிறார்கள். வீட்டிற்கு சென்றதும் வாட்ஸ்ஆப் மூலம் அவர்களுடன் சாட் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று சந்தியா தெரிவித்துள்ளார்.
விருப்பம் இல்லாவிட்டாலும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ய வேண்டி உள்ளது. ஒருவர் வாட்ஸ்ஆப் சாட்டின்போது நான் என்ன உடை அணிந்திருக்கிறேன், அது லேசான துணியா என்று கேட்டார் என கூறி வருத்தப்பட்டார் சந்தியா.
