இந்த வருடத்தின் துய்வக்கம் மிக சிறப்பு என்று தான் சொல்லணும் காரணம் தமிழ் சினிமாவில் சிறப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது ஆம் நல்ல படங்கள் தொடர்ந்து வருகிறது அநேகமாக இந்த வருடத்தின் சிறந்த பட பாட்டிலில் நிச்சயம் பிடிக்க போகும் படம் என்றால் அது ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள சர்வம் தாளமயம் படம் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு படத்தில் நான்கு கருவை சுமந்து கதை சொல்லும் படம் வாழ்கையின் ஆதாரம் இதில் தான் இருக்கு என்பதில் மிக பெரிய உதாரணம் தான் இந்த படம் ஒரு மனிதனின் வாழ்கைக்கு என்ன என்ன வேண்டும் எத்தன மூலம் நாம் வெற்றி என்ற இலக்கை அடைவோம் என்பது தான் இந்த படத்தின் கதையின் கரு.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்,அபர்ணா பாலமுரளி,நெடுமுடிவேணு,குமரவேல்,டிடி என்கிற திவ்ய தர்ஷினி,நீண்ட இடைவெளிக்கு பின் வினித் வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு இசை இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்,ரவி யாதவ் ஒளிப்பதிவில் எழுதி இயக்கி இருப்பவர் இயக்குனர் ராஜீவ் மேனன்
கீழ் ஜாதியில் பிறந்தவர் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்) இவர் விஜய் பேன் விஜய் படங்கள் ரிலிஸ் என்றால் தியேட்டர் பொய் அங்கு பால் ஊற்றி ட்ரம்ஸ் அடித்து கலாட்ட பண்ணும இளைஞர்.இவரின் அப்பா குமரவேல் மிருதங்கம் செய்பவர் அம்மா சூப் கடைவைத்து வியாபாரம் செய்பவர் இயில் எந்த பொறுப்பும் இல்லாமல் சுற்றும் ஜிவி ரசிகர் மன்ற தகாரில் மண்டை உடைந்து அதற்கு கட்டும் போடும் பெண்ணுடன் காதல் இப்படி பொருப்பிலாமல் சுட்டும் போது நெடுமுடி வேணு மிக பெரிய மிருந்தங்கவித்த்வான் அவரின் சீடர் வினீத் இருவரும் கச்சேரி போகும் போது வினீத் மிருதங்கத்தை கிழே போட்டு உடைத்து விடுகிறார்.
கச்சேரிக்கு நேரத்தில் இப்படி செய்துவிட்டாயே என்று குமாவேலுக்கு போன் செய்து உடனே ஒரு மிருதங்கம் வேண்டும் என்று சொல்ல ஆள் இல்லை என்பதால் பீட்டர் கிட்ட மிருதங்கத்தை கொடுத்து அனுப்புகிறார் குமரவேல் பீட்டர் அதை சரியான நேரத்தில் அதாவது கச்சேரி ஆரம்பிக்கும் நேரத்துக்கு சரியாக கொண்டு கொடுக்கிறார் பீட்டர் கொடுத்துவிட்டு நான் கிளம்புகிறேன் என்று சொல்ல நெடுமுடி வேணு உக்காரு போகாதே என்று சொல்ல நெடுமுடி வேணு கச்சேரியில் மிருதங்கம் வாசிக்க அதை பார்த்து ரசித்த பீட்டருக்கு மிருதங்கம் மேல் ஒரு காதல் உண்டாகிறது நாமும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
ஆனால் இவர் கிழ் சாதி என்பதால் இவரின் ஆசையை இவரின் அப்பாவிடம் சொல்ல அவரும் அவரை இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று சொல்ல ஆனால் இவருக்கு இந்த மிருதங்கம் மீது ஆலதியான காதல் இதில் நாம் சாதிக்க வேண்டும் வேம்பு ஐயரிடம் அதாவது நெடுமுடி வேனுவிடம் சீடராக சேர்ந்து இதை முறையாக பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை ஆனால் இவர் கிழ் சாதி இதனால் இவரை வினித் மிகவும் அவமான படுத்துகிறார் மிகவும் கேவலமாக நடத்துகிறார் இருந்தும் இவரின் ஆர்வத்தை புரிந்த நெடுமுடி வேணு இவரை சீடராக சேர்கிறார் இது மேலும் வினித்க்கு கோவத்தை உண்டு பண்ணுகிறது இதனால் பீட்டரை மிகவும் அவமனா படுத்துகிறார்.
வரி கையை உடைக்கிறார் இதனால் கோவம் அடைந்த நெடுமுடி வேணு வினீதை வீட்டை விட்டே அனுப்புகிறார் போயும் போயும் ஒரு கிழ் சாதி பயனுக்காக என்னை வீட்டை விட்டு வேல்யேற்றி விட்டார் என்ற கோவத்தில் நெடுமுடி வேனுவையும் பீட்டரையும் தன் தங்கை டி டி மூலம் பழிவாங்க நினைக்கிறார் இந்த பழி வாங்கல் படலம் பீட்டர் மீது ஒரு பொய் கேஸ் போட்டு அந்த ஊரை விட்டே போகின்ற நிலைமை ஏற்படுகிறது இதை மீறி பீட்டர் மிருதங்க வித்வான் ஆகிறார இல்லையா என்பது தான் மீதி கதை
தன் திரைகதை மூலம் படத்தை மிக சுவாரியசமாக ஆகியுள்ளார் இயக்குனர் ராஜீவ் மேனன் படத்தின் பலம் நட்சத்திர தேர்வு அது தான் மிக பெரிய பலம் கதை ஓட்டம் தெரிந்து அனைவரும் அதைமிக சிறப்பாக செய்துள்ளனர்.ஒவ்வொரு காட்சியும் அருமையாக பிரதிபலித்து இருக்கிறார். இயக்குனர் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை மிகவும் அழகாக கதை கள்ளமும் சரி காட்சிகளும் அமைத்துள்ளார்.கதைக்கு ஏற்ற திரைகதை மிக சிறந்த ஒளிப்பதிவு பின்னணி இசை தேவைக்கு ஏற்ப பாடல்கள் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் மெனக்கெடல் செய்து இருக்கிறார் இயக்குனர் ராஜீவ் மேனன்
ஜி.வி.பிரகாஷ் கதையின் மற்றும் கதாபாத்திரத்தின் வலிமையை தெரிந்து உணர்ந்து நடித்து இருக்கிறார். தன் அற்புதமான நடிப்பின் மூலம் மிக பெரிய இடத்தை பிடிக்கிறார் அதோடு நம்மை பல காட்சிகளில் த்ன்னடிப்பின் மூலம் நெகிழ வைக்கிறார்.
படத்தின் கதையை மிகவும் தாங்கி பிடிப்பவர் நெடுமுடி வேணு மலையாள நடிகர் மிக சிறந்த நடிகர் என்று பல முறை தன்னைநிரூபித்தவர்.அதை மீண்டும் இந்த படம் மூலம் நிருபித்துள்ளார் பிரமிக்க வைக்கும் நடிப்பு வேம்பு ஐயர் மிருதங்க வித்வான் எப்படி இருப்பாரோ அப்படி காட்சி அளித்தார் ஒரு பிரமாணன அதே நேரத்தில் ஒரு மனிதனா ஒரு மேதையாக இப்படி ஒவ்வொரு பாத்திரத்தையும் மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.
வினீத் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் ஆனால் இந்த முறை வில்லானாக அதை மிக சிறப்பாக செய்துள்ளார் இயக்குனரின் நம்பிக்கையை வீணடிக்காமல் சிறப்பாக நடித்து இருக்கிறார்
நாயகியாக அபர்ணா பாலமுரளி பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி இருக்கிறார் அதேபோல ஜி.வி.பிரகாஷ் அப்பாவாக வரும் குமரவேல் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார் பல படங்களில் தன் திறமையை நிருபித்த குமரவேல் இந்த படத்திலும் அதை சரிவர செய்து இருக்கிறார்.
மொத்தத்தில் சர்வம் தாளமயம் ஆனந்த ராகம் Rank 4/5