“எமன்’ படத்தின் ஒரு வரி கதை”
"ஒரு சராசரி மனிதன் எவ்வாறு அரியணையில் அமர முயற்சி செய்கிறான் என்பது தான் 'எமன்' படத்தின் கதை" என்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர்
விஜய் ஆண்டனி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'எமன்'. அரசியலை மையமாக கொண்டு ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் இந்த 'எமன்' திரைப்படத்தை, 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கமும், 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்திருக்கும் 'எமன்' திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
"ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து தான் நான் எப்பொழுதும் கதை எழுதுவேன். அதற்கு பிறகு தான் அதை எப்படி காட்சி படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் ...
