சென்னையில் கண்தானத்திற்காக 101 மணி நேர தொடர் மாரத்தான் ஐயர்னிங் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25ம் தேதி முதல் 5 நாள் நடக்கிறது
உலக அளவில் தொடர்ந்து 100 மணி நேரம் துணிகள் ஐயர்னிங் செய்ததுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. சென்னையை சேர்ந்த டேனியல் சூர்யா என்பவர் 101 மணி நேரம் தொடர்ந்து ஐயர்னிங் செய்து அந்த சாதனையை முறியடிக்கப் போகிறார்.
இந்த சாதனை நிகழ்ச்சி லயன்ஸ் கிளப் ஏ1,ஏ6 இரு மாவட்டங்களின் சார்பில் மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. லயன்ஸ் மாவட்ட கவர்னர்கள் பி.எஸ்.வி.குமார், குணராஜா, லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.தியாகராஜா, முரளி, எம்.பி.சிவராமகிருஷ்ணன், கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் டேனியல் சூர்யா ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.
கின்னஸ் சாதனை முயற்சியாளர் டேனியேல் சூர்யா கூறும்போது: உலக அளவில் தொடர் மாரத்தான் ஐயர்னிங் சாதனை 100 மணி நேரம். இந்த சாதனையை முறியடிப்பதுடன் கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்ச...
