தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் அடுத்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பட தலைப்பு
ரசிகர்கள் எந்த மாதிரியான கதைகளை விரும்புகிறார்கள், அவர்களின் ரசனை என்ன என்பதை நன்கு ஆராய்ந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்வது தான் ஒரு தயாரிப்பாளரின் தலையாய கடமை. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளராக தனது பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து வருகிறார் ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் எல்ரெட் குமார். இவர் தயாரிப்பில் வெளியான 'கோ 2' ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற, தற்போது இவர் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் 'கவலை வேண்டாம்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி தரம் வாய்ந்த படங்கள் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்க, அடுத்து இவர் தயாரித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'வீரா'.
அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இந்த 'வீரா' படத்தை ராஜாராம் ...
