
நெருங்கிய நண்பனுக்கு துரோகம் செய்த பாபி சிம்ஹா
‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தை தன் மேனேஜர் சதீஷ் பெயரில் தயாரித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, நல்லவருக்கும் நல்லவராக இருக்கிறாரா என்றால், அதுதான் இல்லை! அதற்கு உதாரணமாக சொல்ல ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், லேட்டஸ்ட்டாக ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் நண்பனுக்கு திருட்டுப்பட்டம் கட்டி ஜெயிலுக்கு அனுப்ப நினைத்த சம்பவம்.
ஜிகிர்தண்டா, இறைவி போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய செந்தில்குமரன் என்பவர் மீதுதான் இந்த திருட்டுப்பட்டத்தை சுமத்தியிருக்கிறார் பாபிசிம்ஹா. அந்த படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் பாபிசிம்ஹாவுக்கு குளோஸ் பிரண்ட் ஆகியிருந்தார் செந்தில்குமரன். வல்லவனுக்கும் வல்லவன் படத்தின் எக்சிக்யூட்டிவ் புரட்யூசராகவும் இவரை பயன்படுத்திக் கொண்டார் பாபி. அந்த அன்பில் தனது காரை முழு நேரமாக படப்பிடிப்புக்கு பயன்படுத்திய செந்தில்குமரன், படப்பிடிப்பு தடை படும் நேரத்...