
லங்கை துரை இயக்கத்தில் போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் ” இ.பி.கோ 302 “
செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " இ.பி.கோ30 " என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார்.
ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது.இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் மற்றும் வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி வின்ஸ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை.இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் பேசிய போது... கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல்...