‘அந்தரன்’ – திரைவிமர்சனம். Rank 3.25/ 5
‘அந்தரன்’ திரைவிமர்சனம்: மரணங்களின் பின்னால் மறைந்திருக்கும் மன உளவியல் மர்மம்!
தமிழ் சினிமாவில் மர்மத் திரில்லர் கதைகள் புதிதல்ல. ஆனால், ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள் என்ற ஒற்றை வரிக் கதையை மையமாக வைத்து, அதன் பின்னணியில் மனித மனதின் இருண்ட பக்கங்களை ஆராய முயற்சித்திருக்கும் படமாக உருவாகியுள்ளது ‘அந்தரன்’.
கார்த்திகாவைச் சுற்றி நடக்கும் தொடர் மர்ம மரணங்கள் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இது சாதாரண சாபக் கதையா? திட்டமிட்ட கொலையா? அல்லது இன்னும் ஆழமான உளவியல் பின்னணியா? என்ற கேள்விகளை எழுப்பியபடியே படம் நகர்கிறது. இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் துப்பறிவாளரின் பயணம்தான் கதையின் மையம்.
நாயகனாக வரும் பிரஜின், கதையின் சஸ்பென்ஸ் தன்மையை சுமக்கும் விதத்தில் அமைதியான நடிப்பை வழங்கியுள்ளார். ஆர்ப்பாட்டமில்லாத அவரது திரை...
