
லட்சுமி பாம்ப் ” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி
தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் 'லட்சுமி பாம்ப்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.
இப்படத்தை தமிழில் எழுதி இயக்கி மாபெரும் வெற்றிப் படமாக்கிய ராகவா லாரன்ஸ் தான் ஹிந்தியிலும் இயக்குகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே
படக் குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமாரும் ராகவா லாரன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார்.
மறுபடியும் இயக்குனர் பொறுப்பை லாரன்ஸ் ஏற்றுக்கொண்டது படக்குழுவை பெருமகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது.
படத்தின் கதாநாயகி கீயரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது,
"அவர் மறுபடியும் இப்படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன். அவரும் அப்படியே சம்மத...