லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” – திரை விமர்சனம். ( Rank 4/5)
திரை விமர்சனம் | "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு" – தூக்குத் தண்டனையை கேள்விக்குள்ளாக்கும் தரமான சினிமா!
தூக்குத் தண்டனை என்பது ஒரு குற்றவாளிக்கான தண்டனையா? இல்லை ஒரு சமூகத்தின் தோல்வியா? என்ற மிகப்பெரிய கேள்வியை பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிய வைக்கும் படமாக உருவாகியுள்ளது "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு."
இயக்குநர் தயாள் பத்மநாபன், ஒரு சாதாரண கொலை வழக்கை மையமாக வைத்து, நீதி, மனிதநேயம், குற்றம், தண்டனை, மனச்சாட்சி ஆகியவற்றை பேசும் வலிமையான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் தொடங்கிய முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகரும் திரைக்கதை, இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது திரைக்கதையும் வசனங்களும்தான். ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து எழு...
