பிரபல இயக்குனரை மிரட்டிய விஜய்யின் மெர்சல் படக்குழு
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ளது. பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் போது வேறு எந்த படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை. காரணம், அனைத்து திரையரங்கங்களையும் அப்படங்கள் ஆட்கொண்டு விடும்.
ஆனால், தீபாவளியன்று சுசீந்திரன் இயக்கி தயாரித்துள்ள ‘நெஞ்சத்தில் துணிவிருந்தால்’ படமும் வெளியாகிறது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து விஜயுடன் சுசீந்திரன் போட்டி போடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், “தான் விஜயுடன் போட்டி போடவில்லை. மெர்சல் ரிலீஸுடன் நானும் வருகிறேன். 2013 ஆம் ஆரம்பம் வெளியான போது பாண்டிய நாடு வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. அதனால் நான் யாருடனும் போட்டியிடவில்லை, என்று சுசீந்திரன் விளக்கம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ’ஐய்யனார் வீதி’ படத்தை தயாரித்து அதில் வில்லனா...
