“போலியான இணையத்தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்- வெங்கட் பிரபு
சினிமா - ஒரு கலை உலகம். அந்த கலை உலகத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது....வித்தியாசமான கதைக்களங்களை கொண்டு தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கி வரும் பல உன்னத படைப்பாளிகளே அதற்கு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் இன்றைய இணையத்தள உலகில் அவர்களின் படைப்புகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. இனி தமிழ் திரைப்படங்ளை இணையத்தளங்களில் வெளியாகாமல் பாதுகாக்க புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது, 'ஃபிரெண்ட் எம் டி எஸ்' நிறுவனம். இதன் ஆரம்பக்கட்டமாக, எப்படி திரைப்படங்களை போலியான இணையதளங்களில் வெளிவராமல் பாதுகாக்கலாம் என்பதை பற்றிய கருத்தரங்கம், 15.11.16 அன்று சென்னையில் உள்ள 'மை பார்டூன்' ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இயக்குநர் வெங்கட் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பி எல் தேனப்பன், 'ஃபிரெண்ட் எம்...