மு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான் நடிக்கும் “ முந்திரிக்காடு “
தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் தட்டாங்காடு என்கிற கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலை சம்பம்,அந்த சரகத்தில் பணிபுரிந்த காவல்துறை ஆய்வாளர் அன்பரசனை (செந்தமிழன் சீமான் ) மன ரீதியாக கடுமையாக பாதிக்கிறது. அதாவது அந்த ஊரை சேர்ந்த ஒரு ஆதிக்க சாதி ஆணும், தாழ்த்தப்பட்ட பெண்ணும் காதலிக்கின்றனர். அந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை, உள்ளூர் சாதி வெறியர்கள் ஒன்பது பேர் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர்.வலுவான சாதிய அரசியல் பின்னணி இருப்பதால் கொலையாளி களை சட்டம் எதுவும் செய்ய இயலாமல் தலைகவிழ்ந்து நிற்கிறது.ஆனால், சட்டப்படி அவர்களை எப்படியாவது தண்டித்து விட வேண்டும் என்று அன்பரசன் கடுமையாக போராடிக்கொண்டு இருக்கும் போது, அடுத்து அதே ஊரில் இன்னொரு காதல் உருவாவது கண்டு அதிர்ச்சியடைகிறார்.
தட்டாங்காடு கிராமத்தில் வாழுகிற முருகன் (''தியேட்டர் லேப்'' ஜெயராவ் ) ஒரு ஏழை முந்திரி விவசாயி. அவரது மூத்த மகள் தெய்வ...
