1950களின் கேரளத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – சென்னையில் பிரம்மாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு!
1950களின் கேரளத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – சென்னையில் பிரம்மாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு!
மலையாள திரைப்பட உலகின் திறமையான நடிகர் Tovino Thomas முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பை முன்னிட்டு, சென்னை நகரில் வித்தியாசமான அணுகுமுறையுடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் கதை, உருவாக்கம், மற்றும் அதன் பின்னணியில் உள்ள முயற்சிகள் குறித்து படக்குழுவினர் ஆழமாக பகிர்ந்து கொண்டனர்.
Dijo Jose Antony இயக்கத்தில் உருவான இப்படம், 1957-58 காலகட்ட கேரளத்தின் சமூக-அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை மற்றும் உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு எமோஷனல் ஆக்ஷன் என்டர்டெய்னராக அமைகிறது.
🎥 “கதைக்கு உயிர் கொடுத்த அனுபவம்” – டொவினோ தாமஸ்
நடிகர் டொவினோ தாமஸ் தனது உரையில், இந்தப் படம் ஒரு சாதாரண வரலாற்று படம...
