ஆங்கிலம் மற்றும் இந்தியில் பா.இரஞ்சித் தயாரிக்கும் “பி.ஆர் அம்பேத்கர் இன்றும் நாளையும்”
இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராக படங்கள் தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் "பரியேறும் பெருமாள்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" என்கிற படத்தை தயாரித்து வருகிறது இவருடைய "நீலம் புரொடக்ஷன்ஸ்" நிறுவனம்.
இந்நிலையில் மும்பையைசேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஜோதி நிஷா-வுடன் கைகோர்க்கிறது "நீலம் புரொடக்ஷன்ஸ்" நிறுவனம்.
"பி.ஆர் அம்பேத்கர் - இன்றும் நாளையும்"
என்கிற இந்த ஆவணப் படத்தை இயக்குநர் ஜோதி நிஷாவுடன் இணைந்து தயாரிக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
90 நிமிடங்கள் நீளமுள்ள இந்த ஆவணப் படத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் மதம் குறித்த பார்வை, சுதந்திரம், இந்தியாவில் புராணங்கள், இந்திய அரசியலில் சாதி நிறுவனமாக்கப்பட்டது, இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களின் நிலை ஆகியவை உள்ளிட்ட பலவற்றை ஆவணப்படுத்த திட்டமிட்டிர...
