“ராம் சரணின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘பெத்தி’… கிளைமாக்ஸ் ரசிகர்களை அதிர வைக்கும்!” – சிவராஜ்குமார் உறுதி
“ராம் சரணின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘பெத்தி’… கிளைமாக்ஸ் ரசிகர்களை அதிர வைக்கும்!” – சிவராஜ்குமார் உறுதி
ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் தற்போது தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. கிராமத்து பின்னணியுடன் ஆக்ஷன், உணர்ச்சி, விளையாட்டு மற்றும் உறவுகளை இணைத்து உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இப்படத்தில் முக்கியமான “கௌர்நாயுடு” கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சமீபத்திய ஊடக சந்திப்பில் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
“பெத்தி சாதாரண கமர்ஷியல் படம் அல்ல; உணர்ச்சியும் மனித ...
