விஜய் சேதுபதியின் சீதக்காதி தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றிய ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்!
நல்ல கதையம்சம் உடைய மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து, அதை மக்களிடம் சிறந்த முறையில் மிகுந்த கவனத்தோடு கொண்டு சேர்க்கும் முயற்சியை தொடர்ந்து செய்வது தான் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் அவர்களின் முக்கியமான நோக்கம். ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக கடந்த பல ஆண்டுகளாக அதனை நிரூபித்தவர் ரவீந்திரன். அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் சீதக்காதி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கிறார்.
மேலும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருமே மேற்சொன்ன விஷயங்களில் ஒரே மாதிரியானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்த விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரும்.
'நல்ல கதை எப்போதும்...


