என்னை அழைக்காவிட்டாலும் நான் வந்து இருப்பேன் சிவாஜி மணி மண்டபத்தில் கமல்
சிவாஜி மணிமண்டபத்தை திறந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, “புரட்சித்தலைவி அம்மா, சென்னை, அடையாறில் நடிகர் திலகத்துக்கு மணி மண்டபம் அமைக்க 2.80 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கியும் உத்தரவிட்டார். அம்மாவின் ஆணைக்கிணங்க, மணிமண்டபம் கட்டப்பட்டு, பணி நிறைவடைந்ததையடுத்து, நடிகர் திலகத்தின் பிறந்தநாளில் மணிமண்டபம் திறப்பு விழா நடத்தப்படுவது, அவருடைய புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமையும் எனும் உயர்ந்த எண்ணத்தோடு, அவரது பிறந்த நாளான 01.10.2017 அன்று தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா நடத்திட முதல்- அமைச்சர் உத்தரவிட்டார். திரைப்பட உலகம் பெருமை கொள்ளும் வகையிலும், மேலும் வளர்ச்சி அடைய பல்வேறு சலுகைகளை அளித்து, தமிழ்த் திரைப்படத்தொழில் நிலைத்து நின்று எழுச்சி பெற வழிவகுத்தவர் புரட்சித் தலைவி அம்மா.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு ரூ...
