பாடலாசிரியர் சினேகன் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்
சினேகன் தமிழ் பாடலாசிரியர், நடிகர், மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார். சினேகன், சிவசெல்வமாக தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கரியாப்பட்டி என்ற சிறு கிராமத்தில், எட்டாவது மகனாக பிறந்து வளர்ந்தவர். இவரது குடும்பம் விவசாய குடும்பமாகும்.
இவர் சென்னைக்கு வந்ததும், கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றியுயுள்ளார். பின்பு புத்தம் புது பூவே திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இது வரை 600 திரைப்பட பாடல்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். 50 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
முதன்முதலாக கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்று தன் திரையுலக பிரவேசத்திற்கு ஓர் தளம் அமைத்துக் கொண்டார்.
அன்று முதல் தொடர்ந்து கிட்டத்தட்ட 95வரை அதாவது 5 வருடங்கள் வைரமுத்து அவர்களின் உதவியாளராகப் பணிப்புரிந்து பின்பு, சில தனிப்பட்ட காரணங்களால் விலகி வந்...
