பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு காயத்திரி அது யார் தெரியுமா ?
சினிமாவில் வாய்ப்பில்லாத, ஓரம் கட்டப்பட்ட நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு விஜய் டிவி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சொத்தையாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சி தான் தற்போது அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நம்பர் ஒன்.
டிவி பார்க்காதவர்கள் கூட இரவு 9 மணி ஆனவுடன் விஜய் டிவி பார்க்க தொடங்கி விட்டார்கள். அதற்கு காரணம், இதில் பங்கேற்பவர்களின் நடிப்பு கலந்த வாழ்க்கை தான்.
இப்போட்டி தொடக்கத்தில் என்ன கட்டிபிடிக்க ஆளே இல்ல, என்று கூறி பரபரப்பை தொடங்கிய ஜூலி, பிறகு ரசிகர்களை கடுப்பேற்றுவதில் முதலிடத்தை பிடித்தார். அவரைத் தொடர்ந்து போட்டியில் பரபரப்பை உருவாக்கும் நபராக உருவெடுத்த ஓவியா, காதல், தற்கொலை என்று பல நாட்கள் போட்டியை இண்டர்ஸ்டிங்காக கொண்டு சென்றாலும், நாளடைவில் போட்டிக்கே ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டார். அதனால் அவர் ந...
