பெரிய திரையை சின்னத்திரைக்கு கொண்டு வரும் முயற்சியே தற்போது நாங்கள் செய்துள்ள முயற்சி. -இயக்குநர் ராஜ் கபூர்
இயக்குநர் சுந்தர்.C - இன் அவினி சினிமேக்ஸ் (P) லிமிடெட் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்.டிவியுடனும் இணைந்து நாங்கள் உருவாக்கிய திட்டம் தான் இந்த “ நந்தினி “ தொடர் . இந்தியாவிலேயே முதல் முறையாக படத்தயாரிப்பு ( Film Making) செய்து தொடருக்கு வழங்குகிறோம். 4K தொழில்நுட்பத்தில் இத்தொடரை படம்பிடித்து 5.1-ல் மிக்ஸ் ( MIX ) செய்து வழங்குகிறோம் . இது ரசிகர்களுக்கு தொடர் நிகழ்ச்சி பார்த்த அனுபவமாக இல்லாமல் திரைப்படம் பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும். சிறந்த தரமான தயாரிப்பை நாங்கள் செய்துவருகின்றோம் இது தொடரும். இதில் பணியாற்றும் அனைவரும் திரைப்பட துறையை சார்ந்தவர்கள். இதை நாங்கள் சினிமாவாகவே எடுத்து அதை தொடராக உங்களுக்கு கொடுக்கின்றோம். அதனால்தான் இந்த நந்தினி தொடர் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இது மிகவும் பிரம்மாண்டமான தொடராக இருக்கும். எங்கள் த...
