தமன்னா எடுத்த விபரீத முடிவு வருத்தப்படும் நயன்தாரா
நயன்தாரா சிக்கிக் கொண்டு வெளியே வந்து வருஷங்கள் ஆவதற்குள், அடுத்த நயன்தாராவாக சிக்கிக் கொண்டிருக்கிறார் தமன்னா. பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்குமான லவ், ஊரே வியந்த கதை! மாஸ்டரின் முதல் மனைவிக்கும், நயன்தாராவுக்கும் நேரடி சண்டையே வந்தது. படப்பிடிப்புக்கு நேரில் வந்து முடியை பிடித்து இழுக்கவும் கூட திட்டமிட்டார் மாஸ்டரின் மனைவி. அதற்கப்புறம் கால மாற்றத்தில் எல்லாம் நீர்த்துப் போனது. திருமணம் வரைக்கும் போன காதலை, திரும்பவும் கண்ணீரில் கரைத்து விட்டு கரையேறினார் நயன்தாரா. இந்த களேபரங்களில் நயன்தாரா பாடுபட்டு சேர்த்த பணம் பதினைந்து கோடி அவுட்டானதுதான் மிச்சம்! இன்னொரு மிச்சம்… நயன்தாராவின் கையில் பச்சைக்குத்திய P என்ற இனிஷியல்!
இப்போது மாஸ்டரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டாராம் தமன்னா. தேவி படத்தில் துவங்கிய நட்பு மெல்ல காதலாக மாறியதாகவும் கூறுகிறது கோடம்பாக்கம்....
