நூறு சாமி’ – திரை விமர்சனம் (Rank 4/5)
‘நூறு சாமி’ திரை விமர்சனம்
பெண்களை தெய்வமாக அல்ல, மனிதர்களாக பார்க்கச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு!
இயக்குநர் சசி என்றாலே வாழ்க்கையின் நிஜங்களை உணர்ச்சிகளுடன் திரையில் பதிவு செய்யும் படைப்பாளி என்ற அடையாளம் நினைவுக்கு வரும். ‘சொல்லாமலே’, ‘டிஷ்யூம்’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ என மனித உறவுகளையும் சமூகத்தின் மறுபக்கங்களையும் பேசிவந்த அவர், இம்முறை ‘நூறு சாமி’ மூலம் சமூகத்தில் இன்னும் பேசத் தயங்கப்படும் ஒரு முக்கியமான விஷயத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கிறார்.
கதை என்ன?
இளம் வயதிலேயே கணவனை இழக்கும் செல்வி (ஸ்வாசிகா), தனது இரண்டு மகன்களையே உலகமாகக் கொண்டு வாழ்க்கையை முன்னெடுக்கிறார். தனியாக வாழும் பெண் எதிர்கொள்ள வேண்டிய சமூக அழுத்தங்கள், பொருளாதாரப் போராட்டங்கள், மனரீதியான சவால்கள் என அனைத்தையும் கடந்து குழந்தைகளை வளர்க்கிறார்.
காலம் நகர, மகன்கள் வளர்ந்து தங்கள் வாழ்க்கைப் பாதை...


