தமிழ் சினிமா இனி சென்னையை மட்டும் நம்பி இல்லை-முருகன் மந்திரம்
சென்னை : 14/4/2018 தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள் ( April 14th ) அன்று திருமதி என்கிற ஒரு குறும்படக்குழு தன் குறும்படம் முன்னோட்டத்தை வெளியிட சென்னையை நோக்கி வந்தார்கள்.
அக்குறும்படம் முன்னோட்டத்தை தமிழ் பத்திரிகையாளர்,சமூக ஆய்வாளர், சமூக பேச்சாளர், தமிழ் சினிமாவில் பல பாடல்கள் எழுதியிருக்கும் இன்னும் எழுத இருக்கும் திரு.முருகன் மந்திரம் அவர்க்ள் மதியம் 12 மணி அளவில் குறும்பட இயக்குனர் பிரகதீஷ், வசனகர்த்தா தினேஷ், மற்றும் சமூக விமர்சனர் கிருஷ்ணன் புத்திரன் உடன் வெளியிட்டார். அதன் பின்பு சிறிது நேரம் குறும்பட இயக்குனரிடம் அக்குறும்படம் பற்றியும், தமிழ் சினிமா பற்றியும் பேசினார்.அந்த உரையாடலில் அவர் கேட்ட கேள்வியும், இயக்குனர் சொன்ன பதிலும் அவருக்கு சிறிது அதிர்ச்சியும், பெறும் மகிழ்ச்சியும் இருந்தது.
அது என்னவென்றால் முருகன் மந்திரம் அவர்கள் "இக்குறும்படத்தை எங்கு எடுத்தாய் "...
