சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘வாழ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு
கனா, NNOR வெற்றிகளைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்றுதனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. ப்ரஸ்ட் லுக்கில் ஒரு மாபெரும் இயற்கை சூழ் குகையின்ஒளி வீச்சில் படத்தின் கதாநாயகனின் நிழல் நின்றுகொண்டிருப்பது போல இருந்தது குறிப்பிடதக்கது.
படத்தின் தலைப்பை வெளியிட்ட இரண்டு வாரமே ஆன இவ்வேளையில் வாழ் படகுழுவினர் திடீரென சமூகவலைதளங்களில் படபிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு படம்தொடர்ப்பான சில புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
படக்குழுவினர் 2018 தொடக்கத்திலிருந்து இத்திரைப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர்...
