வஞ்சகர் உலகம் படத்தில்சாம்.C.S. இசையில் பாட யுவன்சங்கர் ராஜா ஏன் ஒத்துகொண்டார் தெரியுமா?
தனது நிலையான வெற்றியால் கிடைத்த பாராட்டுகளின் மூலம் உச்சத்தில் சவாரி செய்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரின் மிக எளிதில் வெளியில் வர முடியாத மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், சாம் இசையில்
யுவன் ஷங்கர் ராஜா பாடுவது தான். "நள்ளிரவு 3 மணிக்கு நாங்கள் பாடலை பதிவு செய்தோம். யுவன் ஷங்கர் ராஜா ஒரு மணி நேரத்திற்குள் முழு பாடலையும் நிறைவு செய்தார்" என பேசத்துவங்கும் சாம் சிஎஸ், வஞ்சகர் உலகம் படத்தில் யுவனை, ஒரு அழகான காதல் மெல்லிசை பாடலை பாட வைத்திருக்கிறார்.
"இசைத்துறையில் நுழைவதற்கு முன்பே, இளையராஜா சார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். ஆனால், 2004-06 காலகட்டத்தில், லட்சக்கணக்கான ரசிகர்கள் போல, நானும் முற்றிலும் யுவன் சார் இசைக்கு அடிமையாகி இருந்தேன். தமிழ் இசைத்துறையின் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட அவரது இசை என்பது ஒவ்வொரு நபரின் முக்கியமான பகு...


