பிரம்மாண்ட ஐ.டி. நிறுவனங்கள், மால்களில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் க்ரைம் திரில்லர் ‘ஆகன்யா’ – திரையரங்க வருகைக்கு தயாராகும் புதிய முயற்சி!
பிரம்மாண்ட ஐ.டி. நிறுவனங்கள், மால்களில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் க்ரைம் திரில்லர் ‘ஆகன்யா’ – திரையரங்க வருகைக்கு தயாராகும் புதிய முயற்சி!
தமிழ் திரையுலகில் க்ரைம், ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களை விறுவிறுப்பாக இணைக்கும் புதிய திரைப்படமாக ‘ஆகன்யா’ உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் திருமலை சிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஜவஹர் பரமசிவம் இயக்கியுள்ளார்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சமாக, பிரபல ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் நவீன மால்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடங்கள், படத்திற்கு புதிய காட்சியமைப்பையும், சர்வதேசத் தரத்திலான தோற்றத்தையும் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகிகளாக சுப்ரா அய்யப்பா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். வழக்கமான கதாநாயக...
