வசனகர்த்தாவாக படு பிஸியான விஜய் சேதுபதி
தமிழ சினிமாவில் மிக குறைந்த காலத்தில் சகலகலாவல்லவன் என்று அவதாரம் எடுத்தவர் என்றால் அது விஜய் சேதுபதி என்று சொன்னால் மிகையாகது காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகி விட்டவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், வில்லன், கெஸ்ட் ரோல் என எந்தமாதிரியான வேடமென்றாலும தயங்காமல் நடித்து தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
அதோடு, தயாரிப்பாளர், வசனகர்த்தா, பின்னணி பாடகர் எனவும் வளர்ந்துள்ள விஜய் சேதுபதி, தான் தயாரித்து முதிர்ச்சியான வேடத்தில் நடித்த ஆரஞ்சுமிட்டாய் படத்தில் கதை வசனம் எழுதியிருந்தார். இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் - விக்ராந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி வருகிறார்.
ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது இந்த படத்திற்காகவும் நேரம் ஒதுக்கி வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்...

