இளையராஜா நிகழ்ச்சிக்காக ஆர்.பார்த்திபனுக்கு நன்றி சொன்ன விஷால்
பல எதிர்ப்புகள் நடுவே நடந்த இளையராஜா 75 நிகழ்ச்சி ஒரு வழியாக வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது இதன் மூலம் நடிகர் விஷால் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் தங்கள் பலத்தை நிரூபித்துள்ளது. அதோடு நல்ல வசூலையும் பார்த்துள்ளது. இதனால் விஷாலுக்கு அனைவரிடமும் நல்ல பேர் கிடைத்துள்ளது இருந்தும் இந்த நிகழ்வுக்கு மிகவும் உற்சாகமாக உழைத்த முக்கிய நபர் நடிகர் பார்த்திபன் பாதிலே வெளியேறினார் இதற்க்குகாரணம் என்ன என்று தெரியவில்லை.
பல சர்ச்சைகள், நீதிமன்ற வழக்குகள் எனக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் கடைசி சர்ச்சையாக தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் துணைத் தலைவர் ஆக பதவியேற்ற பார்த்திபன் ராஜினாமா செய்தது அமைந்தது.
இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக பார்த்திபன் பல புதுமையான விஷயங்களை செய்ய நினைத்ததாகவும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அவருடைய பாணியில் வித்தியாசமான விதத்தில் தொகுப்புரையை எழுதியிருந்தா...
