அஜித்துக்கு வக்காலத்து வாங்கும் பிரபலங்கள் ஏன் விஜய்க்கு வருவதில்லை ?
தமிழ் சினிமா தற்போதெல்லாம் மெல்ல வேறு தளத்தை நோக்கி பயணிக்கின்றது. காக்கா முட்டை, விசாரணை, மாநகரம், தரமணி என தொடர்ந்து நல்ல படங்கள் வருகின்றது, அதற்கு ரசிகர்களும் தங்கள் முழு ஆதரவை தருகின்றனர்.
ஆனால், இன்றும் உண்மையாகவே தமிழ் சினிமாவை ஆளுபவர்கள் என்று பார்த்தால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் போது கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இதை பலரும் தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர், எப்படி என்றால், ஒருவரின் படம் வரும் போது அந்த படத்தை கிழித்து தொங்கவிடுவார்கள், உடனே எதிர்தரப்பு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட அதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மூன்றாம் உலகப்போரே ஆரம்பிக்கும்.
ஆனால், விமர்சனம் செய்தவர் ஜாலியாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து பணத்தை எண்ணிக்கொண்டு இருப்பார், தற்போது அப்படி ஒரு நிகழ்வு தான் விவேகம் படத்தில் நடந்துள்ளது.
விவேகம் ...
