“ரத்தத்த தா” பாடலால் அச்சத்தின் உலகிற்கு அழைக்கும் ‘டிமான்டி காலனி 3’ – சாம் சி எஸ் இசை மீண்டும் ரசிகர்களை மிரள வைத்தது!
"ரத்தத்த தா" பாடலால் அச்சத்தின் உலகிற்கு அழைக்கும் 'டிமான்டி காலனி 3' – சாம் சி எஸ் இசை மீண்டும் ரசிகர்களை மிரள வைத்தது!
ஹாரர் திரைப்படங்களுக்கு இசை என்பது வெறும் பின்னணி அல்ல; அந்த உலகத்தை உயிர்ப்பிக்கும் முக்கிய சக்தி. அந்த வகையில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை பாணியால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை அச்சத்தின் உலகிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டிமான்டி காலனி 3' திரைப்படத்தின் முதல் பாடலான "ரத்தத்த தா" வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதிய வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்ததுடன், தனது குரலிலும் பாடலை உயிர்ப்பித்துள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் பதற்றம், மர்மம் மற்றும் இருள் கலந்த மனநிலையை உணர்த்தும் விதமாக அவரது குரலும...
