ஆண்களுக்கு அடங்கிப்போகக் கூடாது பிரபல நடிகை ஆவேசம்!!
படிக்கும் யாரும் கோப பட வேண்டாம் கதாநாயகியின் கோபத்திற்கு காரணம் உண்டு அது அவசிய கோபமே..,
“ஆண்களுக்கு பெண்கள் அடங்கிப் போகக் கூடாது. பாலியல் தொல்லைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்” என்று நடிகை டாப்சி கூறினார்.
“சிறு வயதில் வெளியே போகும்போது பயப்படுவேன். நான் ஒரு பெண் என்பதால் யாரேனும் ஏதேனும் செய்து விடுவார்களோ என்ற பதற்றம் இருக்கும். எனது பெற்றோரும் அதை செய்யாதே. அங்கே போகாதே என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தித்தான் என்னை வளர்த்து இருந்தனர். ஆனால் இப்போது மாறி விட்டேன். சமூகம் என்னைப்பற்றி என்ன நினைக்கும் என்று கவலைப்படுவது இல்லை.
எனக்கு பிடித்த விஷயங்களில் சுதந்திரமாக ஈடுபடுகிறேன். அதற்காக எல்லை மீற மாட்டேன். டெல்லியில் நடந்த நிருபயா சம்பவம் போல் நாடு முழுவதும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை வெளிச்சத்துக்கு வருவது இல்லை.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும...
