
இன்று ராஜமௌலி பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை எடுக்க காரணமாக இருந்த படம் மகதீரா. இந்த படம்தான் ஆந்திர சினிமாவில் முதல் 100 கோடி வசூல் சாதனையை எட்டியது.
ஆனாலும் இந்த படத்தின் வசூல் கணக்கை அப்படத்தின் தயாரிப்பாளர் 20% கூட்டி சொல்லிவிட்டதாக அந்நாளில் அவருக்கும் ராஜமௌலிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து தற்போது பேசியுள்ள ராஜமௌலி, ரசிகர்களை ஏமாற்றி போலி பாக்ஸ் ஆபீஸ் கணக்கு சொல்வது தனக்கு பிடிக்காது என கூறியுள்ளார்.
