
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே முதலில் ஞாபகம் வருவது ஓவியாவை தான், அனைத்து மக்களுக்கு அவர்களது வீட்டு செல்ல பெண்ணாகவே ஆகி விட்டார்.
இவரது சுட்டி தனங்களை ரசிப்பதற்காக பல பிக் பாஸ் பார்க்க தொடங்கினர் என்பது யாராலும் மறுக்க முடியாது.
இவர் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஒரு நாள் சக்தி ஓவியாவை பார்த்து அடித்து விடுவேன் என கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓவியாவுக்கு பைபோலார் நோய் இருப்பதாக அவரே என்னிடம் கூறியிருந்தார், அதனால் தான் அவரது மனநிலை நிலையாக இல்லாமல் மாறி கொண்டே இருந்தது என கூறியுள்ளார்.
நானும் அதற்காக தான் அவரிடம் அன்றே மன்னிப்பு கேட்காமல் 100-வது நாளில் அனைவர் முன்னிலையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என கூறியுள்ளார்.
அதுவும் ஓவியாவின் ரசிகர்கள் பலத்தால் கேட்கவில்லை, மனது இறுதி கொண்டே இருந்தது அதனால் மட்டும் தான் கேட்டேன் எனவும் கூறியுள்ளார்.
