
நடிகர் சசிகுமார் அவர்களின் கம்பெனி புரடக்ஷன் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் அசோக் சிறிது நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
அன்புசெழியன் என்பவரிடம் வாங்கிய கடனாலும் கந்து வட்டி கொடுமையாலும் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.இவரின் இறுதி சடங்கிற்கு வந்த இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது , இவரைப்போல பல தயாரிப்பாளர்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் தல அஜித்குமார் அவர்களும் ஒருவர் என்று கூறினார்.இந்த செய்தியை கேட்டு அவரது ரசிகர்களும் தமிழ் திரையுலகினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
