
தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார்.
இவர் இயக்கிய திரைப்படங்கள்
அன்னக்கொடி, பொம்மலாட்டம், கண்களால் கைதுசெய், ஈரநிலம், கடல் பூக்கள், அந்திமந்தாமரை, கருத்தம்மா, பசும்பொன், கிழக்குச் சீமையிலே, கேப்டன் மகள், நாடோடித் தென்றல், புது நெல்லு புது நாத்து, என் உயிர் தோழன், கொடி பறக்குது, ஆராதனா, வேதம் புதிது, கடலோர கவிதைகள், முதல் மரியாதை, ஒரு கைதியின் டைரி, மண் வாசனை, புதுமைப் பெண், காதல் ஓவியம், வாலிபமே வா வா, அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், நிழல்கள், கல்லுக்குள் ஈரம், நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், கிழக்கே போகும் ரெயில், சிகப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே
இவர் எழுத்தாக்கம் வெளியான திரைப்படங்கள்
கண்களால் கைது செய், கருத்தம்மா, நாடோடித் தென்றல், ஆராதனா, முதல் மரியாதை , டிக் டிக் டிக், ரெட் ரோஸ்
இவர் தயாரித்த திரைப்படங்கள்
அல்லி அர்ஜூனா, தாஜ்மகால், கருத்தம்மா
இவர் நடித்த திரைப்படங்கள்
பாண்டிய நாடு, ரெட்டச்சுழி, கல்லுக்குள் ஈரம், தாவணி கனவுகள்,குரங்குபொம்மை
