
இளம் பாடகியான இவர் சென்னையில் வெங்கட்ராமன்-லட்சுமி தம்பதிக்கு மகளாக பிறந்தவர். தற்போது சென்னையில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட மேடையில் பாடல் பாடியுள்ளார். இவர் முதல் முதலில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ இசையில் ‘அவன் இவன்’ என்ற படத்தில் ‘ஒரு மலையோரம்’ என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி வருகிறார்.
