
சசிகுமார் கொடைக்கானலில் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிக நிர்வாகப் படிப்பை படித்து முடித்தார். அவர் 20 வயதில் தன் மாமா கந்தசாமியிடம் திரைப்படங்களில் பணிபுரிந்தார், அவர் சேது(1999) படத்தை தயாரித்தவர். சசிகுமார் இந்த படத்திற்கான உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அங்கு அவர் அமீரிடம் அறிமுகமானார், மேலும் அவருக்காக ஒரு பெயரை உருவாக்கவும் உதவினார். அவர் மௌனம் பேசியதே(2002) மற்றும் ராம்(2005) படத்தில் இயக்குனர் அமீருக்கு உதவினார். அமீரின் பருத்திவீரன்(2007) இன் ஆரம்ப கட்டங்களில் அவர் சுப்பிரமணியபுரம் படத்திற்கான தனது அடித்தளத்தைத் தொடங்கினார்.[3]
இவர் இயக்கிய திரைப்படங்கள்
சுப்பிரமணியபுரம், “ஈசன்” (2010)
இவர் தயாரித்த திரைப்படங்கள்
சுப்பிரமணியபுரம், பசங்க
இவர் நடித்த திரைப்படங்கள்
சுப்பிரமணியபுரம், நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல்
