
சரிதா கெ. பாலசந்தரால் 1978இல் மரோசரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின் கெ.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப்படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத்தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது
சரிதா பாலசந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலசந்தர் அவரை நடிக்கச்செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்புடத்தக்கவை. பாலசந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப்பின் 2005 ல் தமிழில் ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார்
சரிதா சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை 1979-80, 1982-83, 1988 ஆகிய ஆண்டுகளுக்காகப் பெற்றார்
