
அஜித்தின் விஸ்வாசம் படபிடிப்பு முடிந்து பொங்கல் வெளியிட்டுக்கா இறுதிகட்ட வேலை படு மும்முரமாக நடந்து வருகிறது அதே நேரத்தில் அஜித்தின் அடுத்த் படத்தை இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராக இருக்கிறது. இதற்காக சென்னை ஈ.சி.ஆர் பகுதிகளில் படபிடிப்பு தளங்கள் தேர்வாகி கொண்டு இருக்கிறது இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது .
இதற்கிடையில் அஜித் அடுத்து பிங்க் படத்தின் ரீமேக்யில் நடிக்க இருக்கிறார் என்ற வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது அதை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்கும் படம் இந்தி படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. கோவா திரைப்பட விழாவில் பேசிய அவர், “பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள தகவல் உண்மைதான். படம் தயாரான பிறகு அதை என்னிடம் காண்பிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் அஜித்தின் அடுத்த படம் பிங்க் ரீமேக்காக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. 2019ன் இரண்டாம் பாதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருக்கும் இப்படத்துக்கு, இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
