
நடிகர் தனுஷ் அவர்கள் சினிமா வரலாற்றில் இது ஒரு புது கதை அவரது பெயர் கலைச்செல்வன் என்றும் அவர் மேலூரை சேர்ந்தவர் என்றும் கஸ்தூரி ராஜா விஜயலக்ஷ்மி குடும்பத்தில் பிறக்க வில்லை என்றும் ஒரு செய்தி தமிழ்நாட்டில் ஒரு ஐந்து ஆறு வருடமாக வதந்தியாக வெளியாகிறது
அந்த செய்தியை கண்டு தனுஷ் குடும்பம் உண்மையில் அதிர்ந்து தான் போகி இருக்கும் இதில் என்ன கொடுமை என்றால் தனுஷ் எங்கள் மகன் என்று சொல்லும் அந்த புதிய பெற்றோர்கள் நாங்கள் DNA டெஸ்ட்டுக்கும் தயார் என கூறி காமெடி பண்ணி வருகிறார்கள்
இதற்கு பின்னாடி யார் உள்ளார்கள் என தெரியவில்லை ஆனால் சிறு வயது முதல் நடிகர் தனுஷ் சினிமா துறை ஆட்களுக்கு பழக்கம் இயக்குனர் கஸ்தூரி ராஜா சுமார் 40 வருடமாக திரை உலகில் உள்ளார் எனவே நடிகர் தனுஷ் அவர் மகன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை
தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சார்ந்த தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர், இதை தொடர்ந்து தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதில் தங்கள் மகன் 16 வயதில் வீட்டை விட்டு ஓடியதாக கூறியுள்ளனர், ஆனால், தனுஷ் குழந்தையிலிருந்து கஸ்துரிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இதற்கு மேலாவது இந்த வழக்கில் முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டும்.

