
தளபதி விஜய் மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார், தீபாவளிக்கு திருவிழாவாக வெளிவர உள்ள இந்த படத்திற்காக பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது படத்தின் எடிட்டர் ரூபன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அப்போது மெர்சல் படத்தில் இருந்து சில காமெடி காட்சிகளை நீக்கி விட்டோம். படத்தின் நேர அளவு அதிகமாக இருந்ததால் இவ்வாறு செய்தோம் என கூறியுள்ளார்.
அதற்காக கவலை வேண்டாம் படம் ரிலீசுக்கு பிறகு ஒரு நாள் நீக்கப்பட்ட காட்சிகளையும் வெளியிடுவோம் என கூறியுள்ளார், மேலும் நேரயின்மை காரணமாக படத்தின் ட்ரைலர் வெளிவர வாய்ப்பே இல்லை எனவும் கூறியுள்ளார்.
