Monday, April 21
Shadow

குற்றமே தண்டனை – திரை விமர்சனம் (ரசனையின் அறிகுறி) RANK5/3.5

நாம் செய்யும் தப்புக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதை சொல்லும் படம் குற்றமே தண்டனை அரசன் அன்று கொன்றால் நின்று கொள்ளும் என்ற பழமொழிக்கு உதாரணம் தான் இந்த கதை என்றும் சொல்லலாம்

“காக்கா முட்டை” இயக்குனர் எம் மணிகண்டன் தன் முதல் படம் மாதிரியே ஒளிப்பதிவும் செய்திட நட்சத்திரங்கள் : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, ரஹ்மான், நாசர், ‘ஜோக்கர்’ குருசோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், அனுசரன், யோகி பாபு, பசிசத்யா… உள்ளிட்டோர் நடித்தும் இருக்கும் ஒரு மணி நேரம் நாற்பது நிமிட க்ரைம் த்ரில்லர், திரைப்படம் தான் “குற்றமே தண்டனை.”

பிறந்ததிலிருந்தே சற்றே கண் பார்வை குறைபாடு உடையவர் விதார்த். எல்லோரும் போல் சரியாக பார்க்கத் தெரியாத அவருக்கு, கண் அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தான் கலெக்ஷன் பாயாக வேலை பார்க்கும் வங்கி கிரிடிட் கார்டு கடன் கலெக்ஷன் ஏஜென்சியிலும் இன்னும் பிற இடங்களிலும் கேட்டுப்பார்க்கும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அது சமயம், விதார்த் குடியிருப்பு வளாகத்தில் நடக்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் கொலையில் கையும் களவுமாக விதார்த் திடம் சிக்கும் ரஹ்மான் அதை மறைக்க, உடந்தையாக இருக்க, விதார்த்க்கு தேவையான பணம் தர சம்மதிக்கிறார் பெரிய மனிதர் ரஹ்மான். அதற்கு சம்மதிக்கும் விதார்த், அதனால் சந்திக்கும் பிரச்சனைகளும், சம்பவங்களும் தான் “குற்றமே தண்டனை” படத்தின் கதையும், களமும்.

ஒரு கொலையை பிறர் மீது திணித்து காசு பார்த்து, தன் குறைபாட்டைசரி செய்ய முற்படும் கதையின் நாயகனாக விதார்த் கச்சிதம். விதார்த்தின் கண் பார்வை வழியிலான கேமிரா கோணம் பலவும் பேசுகிறது… ஆனால் அவரால் சிலவற்றை தான் பார்க்க முடிகிறது என்பது பாவம். என “உச்” கொட்ட வைக்கிறது. எனினும் கதையின் நாயகர் விதார்த் பாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார்.

சரியாக கண் தெரியாத விதார்த்திடமே முற்றிலும் பார்வை தெரியாத ஒரு பெண் சாலையை கிராஸ் செய்ய உதவி கேட்பது போன்ற காட்சியில் ஒரு பார்வையாலேயே பலதும் சொல்லுகிறார் விதார்த்… என்பது படத்திற்கு பலம்.

கதையின்நாயகியராக ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா இரு நாயகியரில் பூஜா – ஐஸ்வர்யா இருவருக்கும் கொஞ்ச நேரமே நடிக்க வாய்ப்பு தந்தும் அதில், நிறைய நடித்து அசத்தியிருக்கின்றனர். அதில், அகால மரணமடையும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூடுதல் கவனம் ஈர்க்கிறார்..

பிற நட்சத்திரங்களில் விஜய் பிரகாஷ் எனும் பெரும் புள்ளியாக வரும் மாஜி ஹீரோ ரஹ்மான், மகனின் வெளிநாட்டு பிரிவால் கிரிடிட் கார்டு கலெக்ஷன் பாய் விதார்த் திடம் பாசம் காட்டும் நாசரஜூனியர் வக்கீல் பாலாவாக ‘ஜோக்கர்’ குருசோம கந்தரம், “ஒண்ணும் தெரியாதுங்கிறாங்க… ஆனா, வரும் போதே வக்கீ லோட வந்துடுறாங்க….” எனும் இன்ஸ்’மாரிமுத்து மற்றும் ராஜசேகர், அனு சரன், யோகி பாபு, பசிசத்யா… உள்ளிட்ட ஒட்டுமொத்த நட்சத்திரப்பட்டாளம் அவர்களது நல் நடிப்பும் படத்திற்கு மேலும், வலுசேர்க்கின்றனர்.

தொழில்நுட்பகலைஞர்களில், ஆனந்த் அன்னாமலை யின் படத்தொகுப்பு இன்னும் கச்சிதமாக இருந்திருக்கலாம். ‘இசைஞானி’ இளையராஜாவின் பின்னணிஇசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குனர் எம்.மணிகண்டன், தன் முதல் படமான, “காக்கா மு ட்டை” மாதிரியே ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் படமான “குற்றமே தண்டனை”.யில், “எது தேவையோ அதுவே தர்மம்…”, ” நல்லது நினை…” உள்ளிட்ட “பன்ச் “கள் மூலமும், ஐஸ்வர்யா – விதார்த் சம்பந்தப்பட்ட ப்ளாஷ்பேக் காட்சிகள் மூலமும் கவனிக்க வைக்கும் இயக்குனரின் இயக்கத்தில், நல்ல மனிதர் நாசருக்கு விதார்த், கொலையை காரணம் காட்டி சிலரிடம் பணம் பறிக்கும் உண்மை தெரிந்தும் அவர் போலீஸுக்கு போகாதது ஏன்? என கேட்கத் தூண்டும் விதத்தில் திரைக்கதை சற்றே ஓட்டை விழ பின்னப்பட்டிருப்பதும்.

நாசரிடமும் எல்லா உண்மையையும் சொல்லும் விதார்த், தான் தான் கொலைகாரன் என்பது உள்ளிட்ட, முழு உண்மையையும் அவரிடம் சொல்லாதது நெருடலாகவும், லாஜிக்காகவும் இடிப்பது பலவீனம். அதே நேரம், இறுதியில் சிக்கல்களில் இருந்தெல்லாம் விதார்த் விடுபட்டு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழு பார்வை பெற்றாரா? இல்லையா…? என்பதை நியாய தர்மத்திற்கு கட்டுப்பட்டு இயக்குனர் சொல்லியிருப்பது பலம். எனினும், “குற்றமே தண்டனை’யை காக்கா முட்டை அளவிற்கு சுவாரஸ்யமாய் செய்யவில்லை… என்றாலும், தண்டனையாகவும் தர வில்லை… என்பது ஆறுதல்!

ஆக மொத்தத்தில், “குற்றமே தண்டனை’ – ‘ஒரு சில குறைகள் இருந்தாலும், தமிழ் சினிமாவில், புதிய ரசனையின் அறிகுறி!” RANK5/3.5

Leave a Reply