
இன்று ரசிகர்கள் மிக ஆவலோடு காத்து இருக்கும் படம் என்றால் அது விஜய்யின் மெர்சல் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி ஒரு சில மனை நேரங்களில் மிக பெரிய சாதனைகளை புரிந்து வருகிறது இந்த நேரத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் அது என்னவென்றால் அது மெர்சல் படத்தின் கதையும் நேரடி கதையில்லையாம் இதுவும் பழய படத்தின் கதையை தான் ரீமேக் செய்கிறார் அட்லி என்று ஒரு சில தகவல்கள் கசிந்துள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்தின் டீஸர் நேற்று மாலை உலகம் முழுவதும் வெளியாகியது
வெளியான சில மணி நேரங்களில் உலக சாதனை படைத்தது, விவேகம் படத்தின் சாதனைகளை ஓரம் கட்டத் தொடங்கி விட்டது.
இந்நிலையில் தற்போது மெர்சல் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

காரணம் அபூர்வ சகோதர்கள் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை சர்க்கஸ்-ல் வளரும் குள்ள கமல் பழி வாங்குவார்.

அதே போல மெர்சல் படத்தில் குஸ்தி வீரர் விஜயின் மரணத்திற்கு காரணமானவர்களை மாஜிக் மேனாக வரும் விஜய் பழி வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனேவே அட்லீயின் இயக்கத்தில் வெளியான தெறி, ராஜா ராணி போன்ற படங்களும் ரீமேக் படங்கள் என நெட்டிசன்களால் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது
