
மெர்சல்க்கு தான் எத்தனை போராட்டங்கள் தொடர்ந்து வந்த சர்ச்சை எல்லாம் முடிந்த நிலையில் நேற்று ஒரு வினியோகிஸ்தர் மீண்டும் ஆரம்பித்தார் மேலும் ஒரு சர்ச்சைக்கு அதை தாண்டிய தளபதிக்கு அடுத்த பிரச்சனை மழை எப்படி எல்லாம் வருது பிரச்சனை என்று பாருங்கள் இருந்தும் விஜய் ரசிகர்களும் மெர்சல் படமும் கொஞ்சம் கூட அசரவில்லை என்று தான் சொல்லணும்.
அடைமழைக்கு மத்தியிலும் ‘மெர்சல்’ படம் பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள் என போரூர் ஜி.கே தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
‘மெர்சல்’ படத்திற்கு நேற்று 13-வது நாள், அதுவும் வழக்கமாகவே கூட்டம் குறைவாக இருக்கும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை. கடும் மழையிலும் தியேட்டருக்கு வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு ட்வீட் செய்திருக்கிறார் தியேட்டர் உரிமையாளர்.
சென்னை போரூரில் உள்ள ஜி.கே தியேட்டரின் உரிமையாளர், ‘மழை நாளிலும் ரசிகர்கள் நிரம்பியிருக்கும் மெர்சலை கோலிவுட்டின் பாகுபலி என அழைக்கலாமா?’ எனக் கேட்டுள்ளார்.
இந்த அடை மழையிலும் 90% தியேட்டர் நிரம்பியிருந்தது என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மெர்சல் படம் தொடர்ந்து குடும்பம் குடும்பமாகப் பார்க்க, வெற்றிகரமாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.
