Friday, February 7
Shadow

ராதாரவி பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் போகும் நயன்தாரா

நடிகர் ராதாரவி, தன்னை இழிவாக பேசியது குறித்து நடிகை நயன்தார விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமீபத்திய சர்ச்சைகளுக்கு எனது சிறந்த நடிப்பு மூலமே பதிலளிப்பேன். இன்று எனது நிலையை தெரிவிக்கவே விரிவான விளக்கம் அளிக்கிறேன்.

முதலில் எனக்காக தனது கண்டனை தெரிவித்து, தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு என்பது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 

இதுமட்டுமின்றி, நடிகர் ராதாரவியையும் பெற்றவர் ஒரு பெண் என்பதை அவருக்கு நினைவுட்ட நான் விரும்புகிறேன். பெண்கள் மீந்து அவரது இழிவான பேச்சுகள் அவரை ஆணாதிக்கம் மிக்கவராகவே காட்டுகிறது. ஜீனியர் நடிகராக இருந்து வரும் அவர், இளைய தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும். அதை விட்டு இதுபோன்று பேசியிருக்க கூடாது. பெண்களை இழிவாக பேசியதுடன், ராதாரவி பெண்கள் குறித்து கீழ்தரமான ஜோக்களையும் வெளியிட்டுள்ளார்.

ராதாரவின் இந்த பேச்சால் இந்திய குடிமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மனமுடைந்து போயுள்ளனர். இந்த அறிக்கை மூலம் அவருக்கு எனது உறுதியான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ஆண்டவன் அருளால் எனக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைத்து நல்ல படங்களில் நடித்து வருகிறேன். நான் சீதா, பேய், கடவுள், நண்பன், மனைவி, லவ்வர் போர்ன வேடங்களில் நடித்திருந்தாலும், அனைத்து வேடங்களிலும் ரசிகர்கள் என்னை ரசிக்கவே செய்தனர்.

கடைசியாக, இதுகுறித்து உச்ச நீதிமன்ற விதிகளின் படி விசாரணை நடத்தப்படுமா என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நான் கோரிக்கை விடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான “கொலையுதிர் காலம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பான நிகழ்ச்சியில் நடிகரும், டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவர் குறித்து வராத செய்திகளே கிடையாது. பேயாகவும் நடிக்கிறார். சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர்.விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் படியாகவும் இருக்கிறார்கள். கூப்பிடும் படியாகவும் இருக்கிறார்கள்.

நிலைமை அப்படி போய்விட்டது என்று அருவெருக்கத்தக்க வகையில் பேசியது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ராதாரவிக்கு விக்னேஷ் சிவன், ராதிகா, சின்மயி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து, திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும், திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.