
தமிழ் சினிமாவே வியக்கும் அளவுக்கு நடந்த கல்யாணம் என்றால் அது பிரசன்னா மற்றும் சினேகா திருமணம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிக விமர்சியாக நடந்தது அது மட்டும் இல்லாமல் மிக சிறந்த ஜோடி என்றும் எல்லோராலும் பாராட்டு பெற்ற ஜோடி என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு அழகான ஜோடி என்று எல்லோருளாலும் பாராட்ட பெற்றவர்கள்.
பிரசன்னா, சினேகா தம்பதிகள் மனமொத்த தம்பதிகளாக வாழ்கின்றனர். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த சினேகா குழந்தைக்கு தாயானார். 2 வயதில் விஹான் என்ற மகன் உள்ளான். மகன் பள்ளிக்கு செல்ல தொடங்கிய நிலையில் சினேகாவுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ், மலையாளம் என 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். பிரசன்னாவும் நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படமொன்றிலும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கோலிவுட்டில் விஷால் தொடங்கி விஷ்ணுவரை பல நடிகர்கள் சொந்த நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்கின்றனர்.
அதுபோல் தானும் தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்று பிரசன்னாவுக்கு ஆசை பிறந்துள்ளது. தனது விருப்பத்தை மனைவி சினேகாவிடம் தெரிவித்தார். நடிப்பு ஒன்றே போதும் படம் தயாரித்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று சினேகா கூறி வருகிறார். இந்த விஷயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தாலும் மனமொத்த தம்பதிகள் என்பதில் எந்தவொரு மனஸ்தாபமும் இருவருக்கும் இல்லையாம்.
