இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டும் தொழிலாளிதான் புஷ்பா என்ற புஷ்பராஜ். ஆனால், சீக்கிரத்திலேயே அந்த மரங்களை காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாக துறைமுகம் வரை கடத்துவதில் தேர்ச்சிபெறுகிறார் புஷ்பா. ஏற்கனவே அந்தத் தொழிலில் இருந்த கொண்டா ரெட்டி, மங்களம் சீனு போன்றவர்கள் இவருக்கு எதிராக உருவெடுக்கிறார்கள்.
இதற்கிடையில், புஷ்பாவைப் பிடிக்க காவல்துறையும் முயற்சிகளை மேற்கொள்கிறது. சிலர் தோல்வியடைந்துவிட, அந்தப் பணிக்கு புதிதாகச் சேர்கிறார் பன்வீர் சிங் ஷெகாவத். செம்மரக் கடத்தல் தொழிலில் உருவாகும் எதிரிகளையும் புதிதாக வரும் காவல்துறை அதிகாரிகளையும் புஷ்பா எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் ஒரு பகுதி கதையோடு இந்தப் படம் முடிவுக்கு வருகிறது.
ஒரு சிறிய கிராஃபிக்ஸ் குறும்படத்துடன், படத்தின் துவக்கம் அட்டகாசமாக இருக்கிறது. அதுவும் செம்மரக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்ட படம் என்று புரிந்ததும் அந்த சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கிறது.
படத்தின் பிளஸ்:
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடிப்பு, ஒளிப்பதிவு. காடுகள், சண்டைக் காட்சிகள், பாடல்கள்
படத்தின் மைன்ஸ்:
ஏகப்பட்ட வில்லன்கள், மிக மிக நீளமான சண்டைக் காட்சிகள்
மொத்தத்தில், புஷ்பா அனைவரும் ஒரு பார்க்க வேண்டிய படம்.